பக்கங்கள்

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

முரண்பட்டு போனேன்...


    ஒருமுறை நான் என் நண்பர்
    
     ஒருவருடன் தொலைபேசியில்
     
      உரையாடிக்கொண்டிருந்தேன்.
     அப்பொழுது எதிர்பாராத விதமாக

  
  அவருடைய ஏழு வயது மகள் என் நண்பர்  கையிலுள்ள தொலைபேசியை  

  பிடுங்கிக்கொண்டு என்னுடன் உரையாட ஆரம்பித்தாள்.
  என்னை ஒருமுறை கூட நேரில் பார்த்திறாத அவள்
  
  எந்த ஒரு சலனமோ,கூச்சமோ இல்லாது சரளமாக உரையாடினாள்.
  நான் மெய்சிலிர்த்து போனேன் அவள் என்னைப்பற்றி
  நேர்த்தியாக விசாரித்ததை எண்ணி.
  பிரமிப்போடு அவளிடம் கேட்டேன்,
  ”நீயோ என்னை ஒருமுறை கூட பார்த்ததில்லை.
  நான் எப்படி இருப்பேன்?
  சொல்லு பார்க்கலாம்”
   என்றேன்.
   அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
  “ மாமா நீங்க எப்படி இருபிங்கன்னா...
    ரொம்ப உயரமா!
    ஒயிட்டா!
    தலையில நிறைய முடியோட!
    பாக்றதுக்கு அஜித் மாதிரி! “
    முரண்பட்டு போனேன் அவளுடைய வார்த்தைகளை கேட்டு.
 

யார் இவன்?

 
   அன்று எனக்கு விடுமுறை.

  சொந்த ஊருக்கு வந்திருந்தேன்.

  வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து
  என் பெற்றோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

  திடீரென்று எதிர்வீட்டுச் சிறுவன் உள்ளே நுழைந்தான்.

  என் அருகே அமர்ந்துக்கொண்ட அவன்
  பலவாறு கட்டளையிட்டான்.

  முதலாவதாக மின்விசிறியை போடச்சொன்னான்.

  அப்படியே செய்தேன்.

  அடுத்து டிவியை போடச்சொன்னான்.

  அதுவும் நடந்தேறியது.

  விட்டபாடில்லை அவன்.

  போகோ சேனலை வைக்கச்சொன்னான்.

  முகம் சுளிக்காமல் அவன் சொன்னபடி செய்தேன்.

  உடனே அவனிடம் கேட்டேன்,” டேய்!நீயா வந்து எனக்கு இவ்ளோ

  வேல சொல்றியே,நான் யார் தெரியுமா” என்றேன்.

  அதற்கு அவனுடைய பதில்.

  “ஓ! தெரியுமே.நீங்க அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்துட்டு போவீங்க” என்றான்.

  அப்படியே நான் அதிர்ந்துப் போய்,”டேய்! இது என் வீடு” என்றேன்.

  அதன் பிறகு அவன் என்னை சிறிதும் கண்டுக்கொள்ளவில்லை.

  போகோ சேனலின் கார்ட்டூன் பொம்மைகளில் லயத்துப்போனான்.

  ஆனால்,அவனுடைய செய்கைகள் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது.

  என் பெற்றோர் என்னிடம் ஏதோ கேட்க நான் அதில் மூழ்கிப்போனேன்.

  தற்செயலாக, டிவியில் போகோ சேனல் மியூட் ஆகிப் போனது.

  ஆம்.திரையில் ஒலியின்றி காட்சிகள் மட்டுமே தோன்றின.

  இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று தெரியாமல்

  அந்த சிறுவனோ,” ஐயோ! காது கேட்கல.ஐயையோ!! எனக்கு காது கேட்கல.”

  என்று அழுது புலம்ப ஆரம்பித்து விட்டான்.

  ஒருவழியாக அவனை சமாதானப்படுத்தி அவன் வீட்டிற்கு அனுப்பிவைத்தோம்.

  நான் சற்றே மிரண்டு போயிருந்தேன் அவனுடைய செயலைக் கண்டு.

  இப்படி எந்த ஒரு சிறுவனாலும் பேசமுடியுமா?

  யோசித்துப் பார்க்க முடியவில்லை.

  எனக்கு அவனை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க தோன்றியது.

  அவனுடைய வரவிற்காக நான் காத்திருந்தேன்.

  அடுத்த நாள் மதியம் மீண்டும் வந்தான் அந்த சிறுவன்.

  இம்முறை அவனை பரிசோதிக்க எண்ணி டிவிடி பிளேயரை டிவியுடன் இணைத்து

  ஒரு திரைப்படத்தை போட்டுவிட்டேன்.

  நாங்கள் அனைவரும் விறுவிறுப்பாக காட்சியை பார்ப்பது போல் நடித்தோம்.

  அவனும் எங்களுடன் சேர்த்து படம் பார்த்துக்கொண்டிருந்தான்.

  திடீரென்று...

  நான் ரிமோட் கன்ட்ரோலை எடுத்து வீடியோவை மட்டும் அணைத்துவிட்டேன்.

  ஸ்பீக்கரிலிருந்து ஒலியை அணைக்காமல் நாங்கள் அனைவரும் படம்

  பார்ப்பது போல் டிவி பெட்டியையே நோக்கிக்கொண்டிருந்தோம்.

  நான் எதிர் பார்த்தது போலவே நடந்தேறியது.

  ஆம் அவன் எங்கள் அணைவரின் முகத்தையுமே நோட்டமிட்டான்.

  நாங்கள் ஏதும் வெளிப்படுத்தாமல் இருந்தோம்.

  அவனிடம் மட்டும் ஏதோ ஒரு பதட்டம்.

  குழப்பத்துடன் என் அருகே வந்து என் காதைக் கடித்தான்.

  “மாமா! உங்களுக்கு படம் தெரியுதா?” என்றான்.

  “ஓ! நல்லா தெரியுதே” என்றேன்

  அவனுடைய கண்களில் மட்டும் கண்ணீர்.

  தனக்கு மட்டும் கண்ணு தெரியவில்லையோயென்று புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

  நான் அவனை மீண்டும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தேன்.

  அவன் எனக்குள் ஒரு மாறுபட்டவனாகவே தோன்றினான்.

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

ஒரு அப்பாவின் டைரியிலிருந்து...

   
    மகள் கேட்கிறாள்..
  
  
    ” அப்பா, காக்கா ஏன் கருப்பா இருக்கு?”



   அந்த தெய்வ திருமகளுக்கு...
  
   
   அப்பா சொல்கிறார்...
   



    சில வருடங்களுக்கு முன்பு...
    ஒரு அழகிய ஊர்.
     
    யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

   அன்று இரவு  அப்படி ஒரு பேய் மழை பெய்யுமென்று.


   காற்றுக்கூட மோகினி யாட்டம் ஆடியது.
   தூரத்தில்,நாய்கள் ஊளையிடுவது ஏதோ ஹிந்துஸ்தானி கசல் போல் இருந்தது.
   இன்று ஏன் இப்படி?
   ஏதேனும் அதிசயம் நிகழப்போகிறதா என்று யோசித்து முடிப்பதற்குள்...
   தூரத்து வீட்டில் ஒரு தாயின் பிரசவக்குரல்.
   எட்டிப்பார்த்தால் ஒரு ஆச்சர்யம்.
   இரு கைகளையும் இருக்க மூடியபடி ஒரு அதிசய குழந்தை பிறந்திருந்தது.
   அப்படி என்ன தான் கையில் உள்ளது என்று திறந்துப்பார்த்தால்.
   ஒரு கையில் பென்சில் மற்றொரு கையில் அழி ரப்பர்.
   ஏன் என்று தெரிந்து கொள்வதற்குள்.மூ
   பென்சில்லை மட்டும் வைத்துக்கொண்டது.ச்
   தவறாக எழுதினால் தானே அழி ரப்பர் தேவையென்று அதை  
   வீசி எரிந்தது அந்த அதிசய குழந்தை.
   அதன் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சி.
   நாட்கள் ஓடின.
   மாதங்கள் நகர்ந்தன.
   வருடங்கள் கடந்து போயின.
   அதிசய குழந்தை விளையாட்டு பிள்ளையாய் மாறியது.
   ஏனோ தெரியவில்லை சூரியன் அதன் உற்ற நண்பனாகி போனது.
   இருவரும் பரஸ்பரம் உரையாடுவதற்கு ஒரு மொழியை உருவாக்கிகொண்டன.
   ஒவ்வொரு நாள் காலை பொழுதிலும் எழுந்தவுடன் அந்த குழந்தை முதலில்
   காலைவணக்கம் சொல்வது சூரியனிடமே.
   சூரியனும் சோர்ந்து போகும் அதன் முகம் பாராமல்.
   இன்னும் சில தினங்களில் அந்த அதிசய குழந்தைக்கு பிறந்த நாள்.
   பூமியில் உள்ள தன நண்பனுக்கு பிறந்த நாள் பரிசாக டி ஷர்ட்,கை கடிகாரம்,
   வீடியோ கேம் போன்ற பொருட்களை வாங்கி சேர்த்தது வானத்து சூரியன்.
   பரிசுப்பொருட்களை யார் மூலமாக கொடுத்து அனுப்புவதென்று தெரியாமல்
   தவித்த சூரியனின் கண்ணில் பட்டது ஒரு வெள்ளை காக்கை.
   (அப்பொழுதெல்லாம் காக்கைகள் வெள்ளையாகவும் உயரே சூரியனுக்கு
   அருகாமையில் பறக்கும் வல்லமையை பெற்றிருந்தன)
   மகிழ்ச்சியடைந்தது சூரியன்.
   அந்த வெள்ளை காக்கையை அழைத்து பரிசுப்பொருட்கள் அடங்கிய பையை
  
   பூமியில் உள்ள தன் நண்பனிடம் தவறாது சேர்க்க சொல்லியது.
   தலையசைத்த வெள்ளை காக்கை பையுடன் பூமியை நோக்கி பறந்தது.
   வழியில் அதன் கண்ணில் பட்டது ஒரு திருமண ஊர்வலம்.
   பெண்கள் சிலர் பலகார தட்டை கையில் ஏந்தி நடந்து கொண்டிருந்தனர்.
   வெள்ளை காக்கைக்கு நாவில் எச்சில் ஊறியது பலகாரங்களைப் பார்த்து.
   ருசி பார்க்க எண்ணிப் பையை ஒரு மரக்கிளையில் மாட்டி விட்டு சென்றது.
   இதை கவனித்த ஒருவன் பையில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு
   தேங்காய் நார் மற்றும் மணல் கொண்டு பையை நிரப்பி வைத்தான்.
   திரும்பி வந்த வெள்ளை காக்கை ஏதும் அறியாது பையை தூக்கிக்கொண்டு
   சூரியன் கூறிய நண்பன் வீட்டிற்கு வெளியே வீசிவிட்டு உயரே பறந்தது.
   மறு நாள் காலை விடிந்தது.
   தன் நண்பன் சூரியனின் பிறந்த நாள் பரிசை ஆவலுடன் எதிர்நோக்கி
   வெளியே வந்தது அதிசயக்குழந்தை .
   பையை பிரித்து பார்த்தும் பெருத்த ஏமாற்றம்.
   குழந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் வேதனைப்பட்டது  சூரியன்.
   அந்த வேதனை அப்படியே வெள்ளை காக்கையின் மீது கோபமாக மாறியது.
   மறுமுறை அந்த வெள்ளை காக்கை தன் அருகே பறந்து சென்றபோது
   சூரியன் தன் வெப்ப கதிர்களால் சுட்டது.
   வெள்ளை காக்கையின் நிறம் இப்படியாக தான் கருமையாக மாறியது என்று

  சொல்லிமுடித்து திரும்பி பார்த்தார் தந்தை.
  அந்த தெய்வத்திருமகளோ தூங்கிப்போனாள்.
  அவளை தூங்க வைத்த பெருமூச்சுடன் அவரும் தூங்கினார்.
  தன் தந்தைக்காக தூங்கியது போல் நடித்த அந்த தெய்வத்திருமகள்
  மீண்டும் கண்விழித்து அவரை தட்டிக்கொடுத்தாள்.

 

வெள்ளி, மார்ச் 15, 2013

இந்திய (குடி)மனுடன் ஒரு பயணம்.. .

 

அது ஒரு மாலை நேரம்...
ஒரு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
அது பவானியிலிருந்து அந்தியூர் வரை செல்லும் பேருந்து.

அதில் எனக்கு கிடைத்ததோ!மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை.

               ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்ட நான் ஏதோ
 
               சிந்தனைவயப்பட்டேன்..
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய இரு இந்திய (குடி)மகன்கள்

காலியாக இருந்த எனது இருக்கையில அமர்ந்தார்கள்.

அவர்களில் ஒருவர் தெரியாமல் என்னை லேசாக இடித்து விட,

 நான் என் சிந்தனைக்கு சற்றே ஓய்வு கொடுத்து விட்டு
 அவரை திரும்பிப் பார்த்தேன்.
 அவரோ, பதற்றத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

 நான் அதை மௌனமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் ஜன்னல் ஓரம் திரும்பி
சிந்தனையை தட்டிவிட்டேன்.
சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் என் தோள்பட்டையை சுரண்டி,

 ”சார்,என்ன மண்ணிச்சிட்டீங்க தானே?” என்றார்.

 நானும் அமைதியாக தலையசைத்தேன்...
அதோடு விடவில்லை.

 மீண்டும் என் பக்கம் திரும்பி,”சார்,என் மேல உங்களுக்கு ஒன்னும் கோவம்
 இல்லையே? என்ன மண்ணிச்சிட்டீங்க தானே?” என்றார்.
 இம்முறை நான் சற்று எரிச்சலுடன் வாயை திறந்து ஆம் என்றேன்.

 நான் அவருடைய பேச்சை கேட்பதாக எண்ணி குடிப்போதையில் 
ஏதோ புலம்பிக் கொண்டிருந்தார்.
சமாளிக்க முடியாமல் ஜன்னல் ஓரமே திரும்பிக்கொண்டேன்.

அவர் என்னை விட்டபாடில்லை.
 எனக்கு ஏன் இந்த சோதனை என்று நான் நினைத்து முடிப்பதற்குள் மீண்டும்...

 "சார்,ஒன்னு தெரியுமா?ராஜீவ் காந்திக்கு அப்புறம்
 நான் மரியாத கொடுக்கிறது உங்களுக்கு தான்”என்றார்.
 சற்றே மிரண்டுப்போனேன் அந்த இந்திய குடிமகனின் வார்த்தைகளைக் கேட்டு.

 மனசுக்குள் பல கேள்விகள்...
 அவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அப்படி என்ன தான் உறவு?

 அவர் ஏன் என்னை ராஜீவ்காந்தியுடன் ஒப்பிட்டு கூறவேண்டும்?
 எது எப்படியோ என்னை அவர் ராஜீவ் காந்தியோடு ஒப்பிட்டது
 
மனசுக்குள் ஆனந்தமே.

அதை உதட்டோர புன்னகையாக வெளிப்படுத்திகொண்டு தொடர்ந்தேன்.

 மீண்டும் அதே குரல்.
 “சார்,நீங்க எங்க எறங்க போறீங்க?” என்றார்.சலிப்புடன் ஆதர்ஷ் நகர் என்றேன்.

“சார், அன்னமடுவு(அவர் இறங்க வேண்டிய இடம்) வந்ததும் சொல்லுங்க!
நா எறங்கிக்கிறேன்?”என்றார்.

 நான் இறங்க வேண்டிய இடம் அவருடைய இடத்திற்கு முன்பாகவே
 உள்ளது என்றேன்.
 “சார்,பரவாயில்ல நீங்க ஆதர்ஷ் நகர்லேயே எறங்குங்க! என்னோட அன்னமடுவு
  
 வந்ததும் சொல்லுங்க நா எறங்கிக்கிறேன்” என்றார்.

 அவருக்கு விளக்கினேன் நான் அவருக்கு முன்பாகவே இறங்கிவிடுவேன் என்று.
 “சார், நீங்க எங்க வேணும்னாலும் எரங்கிகோங்க! அன்னமடுவு வந்ததும்
  
  என்கிட்டே சொல்லுங்க”என்றார்.

 அதற்கு மேல் என்னால் அங்கே அமரமுடியவில்லை.
 என்னை நானே சாந்தப்படுத்திக்கொண்டு பேருந்தின் பின் படிக்கட்டில்
 
 நின்றுகொண்டு பயணித்தேன்.

 இவரல்லவோ உண்மையான இந்திய (குடி)மகன்!